ஆயிரம் காதலிகள், 69 ஆயிரம் கருத்தடை மாத்திரைகளை வைத்திருந்த மதபோதகர்!

நீதிமன்றமொன்று  மதபோதகர்  ஒருவருக்கு  1075 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துத்  தீர்பளித்துள்ள சம்பவம் துருக்கியில்  இடம்பெற்றுள்ளது.

‘அட்னான் ஒக்டர்(‘Adnan-oktar) என்ற நபருக்கே கடந்த ஜனவரி மாதம் இஸ்தான்புல்  நீதிமன்றத்தினால் இத் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் மீது ”தீவிரவாதக்  கருத்துக்களைப்  பரப்பியமை, சிறுவர் மற்றும் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை புரிந்தமை, மோசடி  உள்ளிட்ட   10 வெவ்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் 1075 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

64 வயதான குறித்த நபர்  நீதிமன்ற விசாரணையின் போது தனக்கு 1,000 காதலிகள் இருப்பதாகத் தெரிவித்ததாகவும் இதனையடுத்து அவரது வீட்டை பொலிஸார் சோதனை செய்த போது 69,000 கருத்தடை மாத்திரைகள் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறு இருப்பினும்  தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்து வருவதாகவும், இதனால்  குறித்த நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்யவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேலும் குறித்த நபர் டார்வினின்  பரிணாமக் கோட்பாட்டை நிராகரித்து, ஹாருன் யாஹ்யா என்ற புனைப்பெயரில் ‘The Atlas of Creation’ என்ற தலைப்பில் 770 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *