முன்னாள் அமைச்சர் ரிஷாத் வெளிநாடு செல்ல அனுமதி!

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வெளிநாடு செல்வதற்கு நீதிமன்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் அவரது வீட்டில் பணியாற்றிய சிறுமி ஹிஷாலினியின் மரணம் தொடர்பான வழக்குகளில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள ரிஷாட் பதியுதீனுக்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வெளிநாடு செல்வதற்காக அவரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலனை செய்த கொழும்பு மேலதிக நீதவான் இந்த அனுமதியை வழங்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *