பப்ஜி விளையாடுவதை கண்டித்த தாயை சுட்டுக் கொன்ற மகன்!
பாகிஸ்தானில் பப்ஜி விளையாட்டிற்கு அடிமையாக விளையாடி வந்த சிறுவனை அவரது தாய் மற்றும் சகோதரன் , சகோதரிகள் கண்டித்து வந்த நிலையில் அவர்களை சிறுவன் சுட்டுக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் தலைநகர் லாகூரில் 45 வயதுடைய சுகாதாரப் பணியாளரான நஹித் முபாரக் என்பவர் வசித்து வருகிறார். விவாகரத்து பெற்ற இவர் தனது மகன் மற்றும் மகள்களோடு வசித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இவர் தனது மூதத மகன் உடனும் இரு மகள்களோடும் இறந்து கிடந்தாக சொல்கின்றனர். காவல்துறையின் படி நடந்த விசாரணையில் அவரது 14 வயதான இளைய மகன் தான் நால்வரையும் சுட்டுக் கொன்றதாக தெரிய வந்தது.
அந்த சிறுவனானவன் தனது படிப்பில் கவனம் செலுத்தாமல் பப்ஜி விளையாடுவதில் அதிகம் கவனம் செலுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது. இதற்காக நஹித் சிறுவனை தொடர்ந்து கண்டித்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுவன் தனது தாய் மற்றும் குடும்ப உறுப்பினர்களை துப்பாகியால் சுட்டுக் கொன்றுள்ளான். மேலும் விசாரணையில் அவரது வீட்டில் இருந்த உரிமம் பெற்ற துப்பாக்கியினை அவரது தாயார் பாதுகாப்பிற்காக வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.