இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!

நாட்டில் இன்றைய தினம் மேலும் 891 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 603.654 ஆக அதிகரித்துள்ளது.இதேவேளை, நாட்டில் மேலும் 17 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.நேற்று (24) இந்த மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அதன்படி, இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 15,330 ஆக பதிவாகியுள்ளது.இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 576,540 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *