மின் துண்டிப்பை நிறுத்த தீர்மானம்!
ஜனாதிபதியுடன் நடந்த பேச்சுவார்த்தையின்
நிமித்தம் மின் துண்டிப்பை
நிறுத்த தீர்மானம்.
ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில், மின் துண்டிப்பை மேற்கொள்ளாதிருக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
மின்சார பிரச்சினை தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றிருந்தது.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் மின்சக்தி அமைச்சர், எரிசக்தி அமைச்சர், கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் மற்றும் மின்சார சபை சேவையாளர்கள் பங்கேற்றிருந்தனர்.
துறைமுகத்தில் உள்ள 2 கப்பல்களில்
இருந்து எரிபொருள் பெறவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.