விரைவில் ஒமிக்ரோன் அலை உருவாகும் அபாயம்!

சிங்கப்பூரில் ஒமிக்ரோன் வகை கொரோனா தொற்று புதிய உச்சத்தை விரைவில் எட்டக்கூடும் என நிபுணா்கள் எச்சரித்துள்ளனா்.

சிங்கப்பூரில் கடந்த சனிக்கிழமை நிலவரப்படி ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று 692 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டது. இதில் 541 பேருக்கு உள்நாட்டிலேயே பரவியது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பரவியதைப்போல சிங்கப்பூரில் ஒமிக்ரோன் வகை தொற்று பரவல் அதிகரிக்கக்கூடும் என தொற்றுநோயியல் நிபுணா் அலெக்ஸ் குக் எச்சரித்துள்ளாா். இதுகுறித்து அவா் கூறியிருப்பது:

சிங்கப்பூரில் தினசரி ஒமிக்ரோன் பாதிப்பு 10,000 முதல் 15,000 வரை விரைவில் அதிகரிக்கக்கூடும். நாட்டில் எந்த வகையான கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன என்பதைப் பொருத்து அடுத்த அலையின் தீவிரம் இருக்கும் எனக் கூறியுள்ளாா்.

இருப்பினும், அமலில் உள்ள கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக, ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகளைவிட சிங்கப்பூரில் ஒமிக்ரோன் பரவல் வேகம் மெதுவாகவே இருக்கும் என வேறு சில நிபுணா்கள் கூறியுள்ளனா்.

60 லட்சம் மக்கள்தொகை கொண்ட சிங்கப்பூரில் 90 சதவீதம் போ் இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா். ஒவ்வொரு 10 பேரில் 5 போ் பூஸ்டா் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா். அப்படியிருந்தும் ஒமைக்ரான் வகை தொற்று அதிகரித்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *