மார்ச்சில் பாரிய நெருக்கடிகள் அதுவே அரசியல் திசையை தீர்மானிக்கும்!
எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் இலங்கையில் ஐந்து பாரிய நெருக்கடிகள் உருவாகும் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
தற்போது இவ்விவகாரம் குறித்து வெளிப்படையாக பேசாமல் உள்ளகப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும், உள்ளகப் பேச்சுவார்த்தையில் தேவையான ஆயத்தம் கிடைக்காவிட்டால் வெளிப்படையாகப் பேசத் தயார் என்றும் அவர் கூறினார்.
“சிலர் நாங்கள் நெருக்கடியில் இருப்பதாக நினைக்கிறார்கள், ஆனால் அது உண்மையல்ல, மார்ச் மாதத்திற்குள் நெருக்கடி உச்சத்தை எட்டும்,” என்று அவர் கூறினார்.
இந்த நெருக்கடிதான் அரசியலின் திசையை தீர்மானிக்கும் என்றார்.
ஹிரு தொலைக்காட்சியுடனான கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.