கனடாவில் அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பில் 1400 கோடி ரூபா பரிசு வென்ற இலங்கை தமிழர்!

கனடாவில் அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பில் 1400 கோடி ரூபா பரிசு வென்ற யாழ் தமிழர்..! வெளியான தகவல்!

கனடாவை சேர்ந்த தமிழர் ஒருவர் அதிஷ்ட இலாபச் சீட்டிழுப்பில் 70 மில்லியன் டொலர்களை (1419.72 கோடி இலங்கை ரூபா) வெற்றி பெற்றுள்ளார்.

பொன்னுத்துரை மனோகரன் (54) என்பவரே, Lotto Max அதிஷ்ட இலாபச் சீட்டிழுப்பில் இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்.

பொன்னுத்துரை மனோகரன் பொன்னுத்துரை, தனது தந்தையின் கனவுகளால் ஈர்க்கப்பட்டு 30 ஆண்டுகளாக அதிஷ்ட இலாப சீட்டுச்களை வாங்கிவருவதாகத் தெரிவித்தார்.

“ஒரு நாள் ‘பெரிய’ வெற்றியைப் பற்றி நான் பல கனவுகளைக் கொண்டிருந்தேன் என அவர் தெரிவித்தார்.

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு, அவர் 2,800 டொலர் பரிசு வென்றார். ஆனால் அது அவர் எதிர்பார்த்த வெற்றியல்ல.

டிசம்பர் 17ஆம் திகதி சீட்டிழுப்பின் போது, பிராம்ப்டனில் ஒரு வெற்றிகரமான டிக்கெட் இருப்பதாக அறிவிக்கப்பட்டதையடுத்து,  அவர் தனது லோட்டோ டிக்கெட்டை வெளியே எடுத்து, எண்களை சரிபார்த்தார். அவரது முதல் நான்கு எண்கள் பொருத்தமாக இருப்பதைக் கண்டார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *