திருமண நாளிலேயே விவாகரத்து பெற்ற தம்பதி!
ஈராக்கில் திருமண நாளன்று கணவன், மனைவியை விவாகரத்து செய்த அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது.
திருமண நாளன்று Mesaytara என்ற சிரிய பாடலொன்று ஒலிபரப்பப்பட்டுள்ளது, அதாவது ”நான் உன்னை கட்டுப்படுத்திவிடுவேன்” என்ற அர்த்தத்தில் பாடல் இருந்ததாம்.
இந்த பாடலுக்கு மணமகள் நடனமாட, மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் கோபமடைந்துள்ளனர்.
ஒருகட்டத்தில் இது வாக்குவாதமாக மாற மணமகளை விவாகரத்து செய்வதென மணமகன் முடிவு செய்துள்ளார்.
இதுவே அந்நாட்டில் மிக துரிதமான விவாகரத்தாக பார்க்கப்படுகிறது, இதேபோன்று கடந்தாண்டும் ஜோர்டானில் பாடல் ஒலிபரப்பப்பட்டதற்காக விவாகரத்து நடந்தது குறிப்பிடத்தக்கது.