இலங்கையில் கொரோனா மரணங்கள் 15 ஆயிரத்தை கடந்தது!
நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்துள்ளது.
கொரோனா தொற்றினால் மேலும் 24 பேர் உயிரிழந்துள்ள நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த 24 உயிரிழப்புகளும் நேற்று பதிவாகியுள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 19 ஆக அதிகரித்துள்ளது.