வாகன இறக்குமதி புதிய அரச நியமனங்களுக்கு தடை!

2022 இல் அரச சேவைக்கு புதிதாக ஊழியர்கள் இணைத்துக் கொள்ளப்பட மாட்டார்கள் – பசில் ராஜபக்ஷ

வாகன இறக்குமதி மற்றும் அரச சேவைக்கு புதிதாக ஊழியர்களை இணைத்துக் கொள்ளது நடவடிக்கைகள் 2022 இல் மேற்கொள்ளப்படாது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அடுத்த ஆண்டின் இறுதி வரை அரச துறைக்கு ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட மாட்டாது எனவும் மேலும், பால்மா இறக்குமதிக்காக நிதி ஒதுக்கீடு செய்ய முடியாது எனவும் நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *