ஒமிக்ரோன் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தாது சுகாதார அமைப்பு அறிவிப்பு!
ஒமிக்ரோன் வைரஸ் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தாது என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
தென்ஆப்பிரிக்காவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பிற நாடுகளுக்கு வேகமாக பரவி வருகின்றமை குறித்து பல நாடுகள் அச்சத்தில் உள்ளது.
இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு கடுமையான நோயை ஏற்படுத்தாது என்று அறிவித்துள்ளது.
இது குறித்து உலக சுகாதார அமைப்பின் அவசர கால இயக்குனர் மைக்கேல் ரியான் தெரிவித்துள்ளதாவது,
“முந்தைய கோவிட் வகைகளை விட ஒமிக்ரோன் கடுமையான நோயை ஏற்படுத்துகிறது என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை.நம்மிடம் மிகவும் பயனுள்ள தடுப்பூசிகள் உள்ளன, அவை தற்போதுள்ள அனைத்து வகைகளுக்கும் எதிராக செயல்பட்டு நோயின் தீவிரத்தை கட்டுபடுத்தியுள்ளது. ஒமிக்ரோன் குறித்து மேலும் ஆராய்ச்சி தேவை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.