இலங்கையில் மீண்டும் மின்சாரத் தடை ஏற்படும் அபாயம்?
நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளில் குறுகியகால மின் தடைகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
எதிர்வரும் சில நாட்களுக்கு இவ்வாறு குறுகியகால மின் தடைகள் ஏற்படும் என இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.
நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையம் முழுமையாக இயங்கி 900 மெகாவோட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் வரை இந்த நிலை காணப்படும் என இலங்கை மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.