தரிக்கா அமைப்பின் தலைவரை கௌரவிக்கும் நிகழ்வு பிரதி மேயர் இக்பால் தலைமையில் நடைப்பெற்றது!
இலங்கைக்கு வருகை தந்துள்ள அரிஸ்துல் காதிரியா தரிக்கா சர்வதேச அமைப் பின் தலைவர் சங்கைக்குரிய அஸ்ஷைக் தைக்கா அஹமட் நாசிரை கௌரவிக்கும் நிகழ்வொன்று அண்மையில் கொழும்பு மாநகரசபையில் பிரதிமேயர் எம்.ரி.எம். இக்பால் தலைமையில் நடைபெற்றது.
மேற்படிநிகழ்வில் கலந்து கொள்ள வருகை தந்த அவரை பிரதிமேயர் மாலை அணிவித்து வரவேற்பதையும் அலுவலகத்தில் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிப்பதையும் அருகில் பிரதமரின் இஸ்லாம் சமய ஆலோசகர் அன்வர் ஹசன் மௌலான மற்றும் மாநகரசபை உறுப்பினர் பூஜ்ய தம்மரங்சி தேரர் மற்றும் ஹமீத் சவ்ஹர் ஆகியோர் கலந்து கொண்டனர்.