கஞ்சா செய்கையின் ஊடாக இலங்கையின் கடனை அடைக்க முடியும்!

கஞ்சா செய்கையின் ஊடாக நாட்டின் கடன் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே ஆலோசனை வழங் கியுள்ளார்.
அரசாங்க அனுமதியுடன் கஞ்சா செய்கையில் ஈடுபட்டு அவற்றை ஏற் றுமதி செய்வதன் மூலம் நாட்டை கடன் சுமையிலிருந்து மீட்க முடியும் என அவர் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

கஞ்சா செய்கையின் ஊடாக நாட்டுக்கு பாரியளவில் அந்நிய செலா வணியை ஈட்ட முடியும்.
தேயிலை, இறப்பர், தெங்கு போன்றவற்றுக்கு கடந்த காலங்களில் சர்வதேச அரங்கில் காணப்பட்ட கிராக்கி தற்பொழுது கிடையாது.
கஞ்சா செய்கையில் ஈடுபட்டு அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுக் கொள்ளத் தேவையில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *