மக்களின் வயிற்றுப் பசியை அறியாத வரவு செலவுத் திட்டம்!

சுகாதாரத்திற்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்தலைவர் ருவான் விஜேவர்தன (Ruwan Wijewardene) குற்றம் சுமத்தியுள்ளார்.

நாட்டில் மோசமான பெருந்தொற்று நிலைமை நீடித்து வரும் நிலையில் சுகாதாரத்திற்காக கடந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை விடவும் இந்த ஆண்டில் 6 பில்லியன் ரூபா குறைவாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாட்டு மக்களின் சுகாதாரம் மற்றும் அவர்களின் வயிற்றுப் பசியை அறியாத அரசாங்கம் ஒன்று எதற்கு என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மக்களை ஏமாற்றும் ஓர் வரவு செலவுத் திட்டம் என தெரிவித்துள்ளார்.

அரிசி, சீனி என நாட்டில் முக்கியமான உணவுப் பொருட்களுக்கு தட்டுபாடு நிலவி வருவதாகவும் மக்கள் சாப்பிட முடியாதுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொய்யான வரவு செலவுத் திட்டம் ஒன்றை சமர்ப்பித்த அரசாங்கம் மக்களை ஏமாற்றியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டில் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் மதிநுட்பம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு மட்டுமே உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *