வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புவோருக்கான முக்கிய செய்தி!

ஏற்றுமதி வருமானத்தை கட்டாயமாக மாற்றுவது தொடர்பான இலங்கை மத்திய வங்கியின் விதிக்கு, இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பப்படுதல் உட்படாது என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், இன்று (09) உறுதிப்படுத்தினார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் மேற்கண்ட விடயத்தை பதிவிட்ட அவர், அவ்வாறு அனுப்பப்படும் பணம் சேவை ஏற்றுமதியாக கருதப்படாது எனவும் விளக்கமளித்துள்ளார்.

தற்போதைய பரிவர்த்தனைகள், அங்கீகரிக்கப்பட்ட அந்நியச் செலாவணியில் மீள வாங்குதல், கடன் சேவைச் செலவுகள், பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குதல் மற்றும் இலங்கை அபிவிருத்திப் பத்திரங்களில் முதலீடுகள் ஏற்றுமதி வருமானத்தை ரூபாயாக மாற்றுவதற்கு முன்னர் வெளியிடப்பட்ட விதியின் கீழ் மத்திய வங்கியின் மூலம் வெளிச்செல்ல அனுமதிக்கப்படுகிறது.

ஏற்றுமதி வருமானம் மத்திய வங்கி வழங்கிய 25% கட்டாய மாற்ற விதிக்கு உட்பட்டது அல்ல என்றும் மாறாக, அனுமதிக்கப்பட்ட பற்று அனுமதிக்கப்பட்ட பின்னர், மீதமுள்ள தொகையை ரூபாயாக மாற்ற வேண்டும் என்றும் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *