சுற்றுலாப் பயணியின் ஆண் உறுப்பைத் தீண்டிய பாம்பு!

தென்னாப்பிரிக்காவிலுள்ள  வனப்பகுதியைப் பார்வையிடச் சென்ற  சுற்றுலாப் பயணி ஒருவரின் ஆண் உறுப்பை நாகப் பாம்பு ஒன்று தீண்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த  47 வயதான குறித்த நபர்  அப்பகுதியில் இருந்த கழிப்பறையைப் பயன்படுத்திய போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் சுமார் மூன்று மணிநேரம் கழித்தே அந்நபர்  வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும்” இதன் போது அவரது அந்தரங்க உறுப்புகள் மற்றும் விதைப்பை முற்றிலும் வீங்கி கரு ஊதா நிறமாக மாறியிருந்ததாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அவரின் உயிரைக் காப்பாற்ற, அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

விஷ பாம்புகளின் தாயகமாக தென்னாப்பிரிக்காவின் அடர்ந்த காடுகள்  விளங்குகின்றன என்பதும்  குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *