பொருட்கள் தட்டுப்பாடு யாரின் தவறு ஒன்றும் புரியவில்லை கீதா தெரிவிப்பு!
®யாரின் தவறு ? யாரிடம் சொல்ல ? எனக்கு ஒன்றும் விளங்குவதில்லை பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
தேனீர் குடிக்க சீனி இல்லாவிட்டால்,பசளை இல்லாவிட்டால்,சிமெந்து கேஸ்
இல்லாவிட்டால்,நீங்கள் அரசாங்கத்தை ஏசுகிறீர்கள் மக்களுக்கு பிரச்சினை ஏற்படும் போது மக்கள் வேறு என்ன செய்வார்கள்.
எங்கள் அரசாங்கம் நிறைய வேலை செய்கிறது ஆனால் ஏச்சும் பேச்சும் குறைவின்றி கிடைக்கிறது.
நான் அரசாங்கத்துக்கு எதிராக கருத்து சொல்வதாக சிலர் என்னை ஏசுகிறார்கள். இவை யாரின் தவறால் ஏற்படுகின்றன ?
இவற்றை யாரிடம் சொல்ல ? எனக்கு எதுவும் விளங்குதில்லை. என பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க பொது மக்களுடனான சந்திப்பொன்றின் போது தெரிவித்துள்ளார்.