மன நோய்க்கு கொடுக்கப்படும் மருந்து கொவிட்டுக்கு பலனளிப்பதாக ஆய்வில் தகவல்!

மனநோய்க்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மலிவான மற்றும் பரவலாகக் கிடைக்கும் மருந்தான Fluoxetine, கொவிட்-19 வைரஸால் ஏற்படும் மரண அபாயத்தையும், தீவிர மருத்துவ சிகிச்சையின் அவசியத்தையும் குறைக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

‘தி லான்செட்’ இதழ் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையை மேற்கோள்காட்டி ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவர் ஜீவந்தர இத்தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆய்வில் பங்கேற்றவர்களிடையே கொவிட்-19 இறப்பு வீதம் 90ஆகக் குறைந்துள்ளது மற்றும் தீவிர மருத்துவ சிகிச்சையின் தேவை 65 வீதம் குறைந்துள்ளது.

மனச்சோர்வு மற்றும் பிற உளக்கோளாறு நிலைமைகளுக்கு சிகிச்சையளிக்க Fluoxetine பயன்படுத்தப்படுகிறது.

பிரேஸிலில் கொவிட்-19 நோயை உருவாக்கும் அதிக ஆபத்துள்ள 1,497 பேர் இந்த ஆய்வுக்குப் பயன்படுத்தப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *