கதிர்காம ஆலயத்தில் தங்க தட்டு மாயம்!
வரலாற்று சிறப்பு மிக்க கதிர்காமம் ஆலயத்தில் 38 பவுன் தங்கத் தட்டு ஒன்று காணாமல் போயுள்ளது.
அதனை தேடி பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், கதிர்காமம் ஆலயத்தில் பணி புரியும் நான்கு பேரிடம் இதுவரை வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை கொழும்பு ஊழல் விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.