தினமும் ஒரு ஏலக்காய் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்!
நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தும் ஏலக்காய் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. தினமும் நாம் ஒரு ஏலக்காய் பயன்படுத்தும் பொழுது அது நம்முடைய உடலுக்கு பல நன்மைகளை தருகிறது.
தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்று சாப்பிடும் பொழுது அது பல ஆரோக்கிய நன்மைகளை தருகிறது
சிலருக்கு பசி ஏற்படாது சாப்பிட பிடிக்காது அப்படிப்பட்டவர்கள்
தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்றால் நல்ல பசி எடுக்கும். ஜீரண உறுப்புகள் சீராக இயங்கும்.
நெஞ்சில் சளி கட்டிக் கொண்டு மூச்சு விட அவஸ்தைப்படுபவர்களும் சளியால் இருமல் வந்து தொடர்ந்து இருமி வயிற்றுவலி வந்தவர்களுக்கும் கூட ஏலக்காய் நல்ல மருந்தாக அமையும். ஏலக்காயை மென்று சாப்பிட்டாலே தொடர் இருமல் குறையும்.
வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கும் ஜீரண உறுப்புகளில் ஏற்படும் பிரச்சினை தான் முக்கிய காரணமாக அமைகிறது. எனவே வாய் துர்நாற்றத்தைப் போக்க ஏலக்காயை தினமும் வாயில் போட்டு மெல்ல வேண்டும்.
சாப்பிடும் உணவு வகைகளில் சிறிது ஏலக்காயை சேர்த்துக் கொள்வது நல்லது. ஆனால் அதிகமாக சேர்த்துக் கொள்ளக் கூடாது.
ஏலக்காயை பொடியாக்கி தேனில் கலந்து சாப்பிட்டால் நரம்பின் பலம் கூடும், கண் பார்வை அதிகரிக்கும்.
ஏலக்காயை பொடியாக்கி துளசிச் சாற்றுடன் கலந்து உட்கொண்டால் அடிக்கடி ஏற்படும் வாந்தி நிற்கும்.
ஏலக்காய் 4, ஒரு துண்டு சுக்கு ஆகியவற்றை சேர்த்து அரைத்து நீர் விட்டு கொதிக்க வைத்து பருகினால் வறட்டு இருமல் தொண்டை வலி போன்றவை தீரும்.
ஏலக்காய் 4, கிராம்பு 4, வெற்றிலைக்காம்பு ஆகியவை பால் விட்டு அரைத்து சூடாக்கி நெற்றியில் பத்து போல் போட்டால் தலைவலி, சளி நீங்கும்
குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டால் இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி, அந்தப் பொடியை தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் மூன்று வேளை தடவினாலே போதும்.
ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டு மூக்கடைப்பில் அவதிப்படும் குழந்தைகளுக்கும் ஏலக்காய் நல்ல நிவாரணத்தை தருகிறது. நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை குழந்தைகள் சுவாசித்தாலே மூக்கடைப்பு நீங்கி மூக்கு உடனே திறந்து கொள்ளும்.
மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், `ஏலக்காய் டீ’ குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள். டீத் தூள் குறைவாகவும், ஏலக்காய் அதிகமாகவும் சேர்த்து டீ தயாரிக்கும்போது வெளிவரும் இனிமையான நறுமணத்தை நுகர்வதாலும், அந்த டீயைக் குடிப்பதால் ஏற்படும் புத்துணர்வை அனுபவிப்பதாலும் மன அழுத்தம் உடனடியாக குறைகிறது.