ரணிலின் அரசாங்கத்தை விட எங்கள் அரசாங்கத்தில் ஊழல் அதிகம் கம்மன்பில தெரிவிப்பு!
ரணில் அரசாங்கத்தை விட எங்கள் அரசாங்கம் ஊழல் மிகுந்தது என அமைச்சர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக கேள்விப்பத்திரம் மூலமான திட்டமொன்றை கேள்விப்பத்திர நடைமுறைகளில் கலந்துகொள்ளாத நிறுவனமொன்றிற்கு வழங்கியுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் ஊழல் மிகுந்த ஆட்சி என தெரிவிக்கும் ரணில் அரசாங்கத்திலோ அல்லது முன்னைய அரசாங்கங்களிலோ இவ்வாறான செயற்பாடு இடம்பெறவில்லை என வருத்தத்துடன் தெரிவிக்கவேண்டியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.