இலங்கையில் நாளை முதல் பயணத் தடை நீக்கம்!
நாட்டில் அமுலில் உள்ள மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு நாளை அதிகாலை 4 மணி முதல் தளர்த்தப்படவுள்ளது.
பயணத்தடை இவ்வாறு தளர்த்தப்பட்டாலும், அநாவசியமாக மாகாணம் தாண்டுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு சுகாதார தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், பொது போக்குவரத்தை பயன்படுத்தும்போது சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.