மிகப்பெரிய கடனுக்கு நாம் அனுமதி வழங்கவோ உடன்படவோ இல்லை ஓமான் தெரிவிப்பு!

எந்தவொரு நட்பு நாட்டுக்கும் உத்தியோகபூர்வமாக மிகப்பெரிய கடனை வழங்க ஓமானிய அரசாங்கம் அனுமதி வழங்கவோ உடன்படவோ இல்லை என அந்நாடு தெரிவித்துள்ளது.

வானொலி ஒலிபரப்பு ஒன்றில் அந்நாட்டின் நிதியமைச்சின் பேச்சாளர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இலங்கையின் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில எரிபொருள் இறக்குமதிக்காக அரசாங்கம் ஓமானிடமிருந்து 3600 அமெரிக்க டொலர் கடனுதவி பெறும் என அண்மையில் தெரிவித்திருந்ததும் இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *