ஞானசார தலைமையில் ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி விசேட வர்த்தமானி வெளியானது!
ஞானசார தேரர் தலைமையில் ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி
வெளியாகியது விசேட வர்த்தமானி
“ஒரே நாடு, ஒரே சட்டம்” சட்ட வரைபை தயாரிப்பதற்காக ஞானசார தேரர் தலைமையிலான 13 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதற்கான 13 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியினால் நேற்று (26) விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை அரசியலமைப்பின் 33 ஆம் உறுப்புரையினால், ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின் வண்ணம் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதற்கான ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.