சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!

சீனாவில் கடந்த பத்து நாட்களில் புதிதாக சுமார் 250 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.

இதன்படி ,பெரும்பாலும் தொலைதூர நகரங்கள் மற்றும் வட மேற்கு எல்லைகளில் அதிக அளவில் தொற்று பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய ,இந்த எண்ணிக்கை கடந்த ஜூலை முதல் ஆகஸ்டு மாதம் வரை பதிவான ஆயிரத்து 200 என்ற தொற்று எண்ணிக்கையை விட குறைவு என்றாலும் கடுமையான ஊரடங்கு விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் ,சென்ற வாரம் முதல் தொடர்ந்து அதிகரித்து வரும் தொற்று எண்ணிக்கை, தொற்று பரவி வரும் பிராந்தியங்கள், 2022 பெப்ரவரியில் பீஜிங்கில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் உள்ளிட்ட காரணங்களால் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *