ஐந்து வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்க தீர்மானம்!
அமெரிக்காவில் 5 வயது குழந்தைகளுக்கு கோவிட்-19 தடுப்பூசி வழங்க ஒப்புதல் வழங்கவுள்ளது.
அமெரிக்காவில் 5 முதல் 11 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தங்களுக்கான முதல் கோவிட்-19 தடுப்பூசி அளவை விரைவில் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் சுயாதீன மருத்துவ ஆலோசகர்கள் குழு, செவ்வாய்க்கிழமையன்று குழந்தைகளுக்கான ஃபைசர் (pfizer) கோவிட்-19 தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்குவது குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அப்போது அதற்கு ஆதரவாக 17 வாக்குகள் கிடைத்து மற்றும் ஒருவர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
இதன் அடிப்படியில், அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) விரைவில் அதன் அதிகாரப்பூர்வ ஒப்புதலை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் குறித்த வயது வரம்பில் 28 மில்லியன் குழந்தைகள் தடுப்பூசிக்காக காத்திருக்கும் நிலையில், நவம்பர் நடுப்பகுதியில் இந்த திட்டம் நடைமுறைக்கு வரலாம் என கூறப்படுகிறது.
இந்த வயது வரம்பில் கோவிட்-19 நோய்த்தொற்றுகளைத் தடுப்பதில் தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் 90.7 சதவீதம் பயனுள்ளதாக இருக்கும் என்று ஃபைசரின் சான்றுகள் FDA குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.