இத்தாலியில் இரண்டு பிள்ளைகளை கொலை செய்த இலங்கைப் பெண்!

இத்தாலி, வெரோனா பிரதேசத்தை சேர்ந்த இலங்கை தாய் ஒருவர் அவரது இரண்டு பெண் பிள்ளைகளையும் கொலை செய்துள்ளார்.
தனது 11 வயது மற்றும் 3 வயதுடைய மகள்கள் இருவரை கொலை செய்துவிட்டு அந்த பிரதேசத்தை விட்டு தப்பி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உயிரிழந்த இரண்டு பிள்ளைகளின் சடலங்களும் அவர்களின் கட்டிலின் மீது கிடந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்த மற்றுமொரு நபரினால் இந்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த பெண் மனரீதியாக பாதிக்கப்பட்டிருந்தாரா என்பது தொடர்பில் இத்தாலி பொலிஸார் விசேட அவதானம் செலுத்தியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வெரோனா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *