HOOTE எனும் புதிய சமூக வலைதள செயலியை தொடங்கி வைத்தார் ரஜினிகாந்த்!
ரஜினி மகள் செளந்தர்யா விசாகன், தனது சொந்த முயற்சியில் மக்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய “HOOTE” என்ற செயலியை உருவாக்கியுள்ளார். இந்த செயலியை ரஜினி அறிமுகப்படுத்தியுள்ளார்.
இந்த செயலி உதவியுடன், மக்கள் தாங்கள் மற்றவர்களுக்கு எழுத்து மூலம் தெரிவிக்க விரும்பும் கருத்துகளையும், விஷயங்களையும், இனி அவர்களது குரலிலேயே எந்த மொழியிலும் HOOTE APP மூலமாக பதிவிடலாம். இந்த புதிய முயற்சியான “HOOTE” செயலியை ரஜினி தன் குரலில் பதிவிட்டு தொடங்கி வைத்துள்ளார்