33 ஆண்டுகளாக பாம்பின் விஷத்தை உடலில் செலுத்தும் அதிசய நபர்!

பாம்பைக் கண்டால் அலறி ஓடும் மக்களுக்கு மத்தியில் அதன் விஷத்தை 33 வருடங்களாக தனது உடலுக்குள் ஊசிமூலம் நபர் செலுத்தி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனைச் சேர்ந்த ஸ்டீவ் லுட்வின்(55). இவர் பாம்புகளின் விஷத்தினை ஊசியால் தன் மூட்டுகளில் செலுத்துவதை பொழுதுபோக்காக வைத்திருக்கின்றார்.  

அதாவது உலகின் ஏழை நாடுகளில் மக்கள் பாம்பு கடி பிரச்சினையால் அதிகமாக உயிரிழந்து வரும் நிலையில் இதற்கு மருந்து கண்டுபிடிக்க கடந்த 33 வருடங்களாக இவ்வாறு செய்து வருகின்றாராம்.

பத்து நாட்களுக்கு ஒருமுறை தனது உடலுக்குள் செலுத்திவரும் இவர் பல விஷப்பாம்புகளை தனது வீட்டின் அலை ஒன்றில் வைத்திருக்கிறார்.

லண்டனில் தனது படிப்பினை முடித்துவிட்டு மிருகக்காட்சி சாலைகளில் விலங்குகள் விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தில் சேர்ந்ததிலிருந்து இவ்வாறு செய்வதற்கு இவருக்கு ஆர்வம் வந்துள்ளதாக கூறப்படுகின்றது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *