முகக்கவசமும் தீங்கு விளைவிக்கும் ஒன்றா?
இப்போதெல்லாம், முகமூடிகள் அல்லது முகக் கவசங்கள் வீட்டை விட்டு வெளியேறும் போது ஒவ்வொரு நபரின் உடலின் இன்றியமையாத பகுதியாக மாறிவிட்டன, ஆனால் அவை சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் ஒன்றாகும். இலங்கையில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டவுடன் இந்த நிலைமை மேலும் மோசமடைய வாய்ப்புள்ளது. இலங்கையில் 11,000 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் உள்ள நூறாயிரக்கணக்கான குழந்தைகள் இருக்கும் சூழலில் நூறாயிரக்கணக்கான முகக்கவசம் பாவனைக்கு உற்படுத்தபடும். முகக்கவசம் அணிவதற்கு 6 மணிநேர நேரத்தை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர், மேலும் 6 மணி நேரத்திற்கு மேல் பாடசாலையை விட்டு வெளியேறும் குழந்தைகள் ஒரு நாளைக்கு இரண்டு முகமூடிகளை அணிய வேண்டும். அவர்களில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களும் உள்ளனர். மேலும் வீட்டில் தங்கியிருந்து அலுவலக வேலைகளைச் செல்பவர்கள் அனைவரும் வருகின்ற காலத்தில் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியிருக்கும். பின்னர் ஒரு நாளைக்கு அகற்றப்படும் இந்த முகமூடிகளின் அளவு இன்னும் அதிகரிக்கும். எனவே, எதிர்காலத்தில் இலங்கைக்கு இது ஒரு பெரிய சவாலாக இருக்க வாய்ப்புள்ளதால் இந்தப் பிரச்சினைக்கு விரைவான தீர்வு காணப்பட வேண்டியது அவசியமாகும்.
இலங்கையில் இன்று குப்பை பிரித்தல் நல்ல அளவில் உள்ளது. நகராட்சி மன்றங்கள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் இதைச் சிறப்பான முறையில் செய்கின்றனர். மக்களும் அழியும் கழிவுகள் மற்றும் அழியாத கழிவுகளை வேறுபடுத்திப் பழகிவிட்டனர். ஆனால் மக்கள் முகக் கவசங்களை குப்பையில் எறியும் பழக்கத்தையும் உருவாக்கியுள்ளனர். இந்த நிலையில், முகமூடிகளை குப்பைத் தொட்டியில் வீசுவதற்கு பதிலாக வீட்டின் வெளியே உள்ள ஒரு தொட்டியில் போட்டு சுமார் இரண்டு நாட்களுக்கு வெளியே வெய்லில் வைப்பது நல்லது. ஆனால் இதுபோன்ற சரியான முறைகள் மருத்துவமனைகளில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. இவை முறையான கழிவுகளை அகற்றும் அமைப்பில் அகற்றப்பட வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது. மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது பொருத்தமற்றது என்றும் சுட்டிகாட்டப்பட்டுள்ளது. இது குறித்து பொதுமக்களுக்கு தெளிவு படுத்துவதில் ஊடகங்களுக்கு பெரிய பங்கு உள்ளது. ஊடகங்கள் இதைப் பற்றி பொதுமக்களுக்குத் தொடர்ந்து தெரிவிக்கும்போது, அது நினைவுக்கு வருகிறது, பழக்கத்திற்கும் வரும் இயற்கையாகவே சரியான கழிவுகளை அகற்றுவதற்கு மக்கள் ஈர்க்கப்படுகிறார்கள். இந்த நிலைமை இன்னும் பல வருடங்களுக்கு நீடிக்கும் என்பதால் பொது விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அவசரமாக தேவைப்படுகின்றன. இது சிறு குழந்தை முதல் பெரியவர் வரை அறிவுறுத்தபட வேண்டும்.
வரவிருக்கும் ஆண்டுகளில் முகமூடிகளை அணிய வேண்டும் என்றால், முகமூடிகள் உற்பத்தியாளர்கள் அவற்றில் அதிகமானவற்றை உற்பத்தி செய்ய வேண்டும், இது அந்த தொழிற்சாலைகளால் சுற்றுச்சூழலுக்கு விடப்படும் கார்பன் டை ஆக்சைட்டின் அளவை அதிகரிக்கும். அவற்றை நிலத்தில் பரவவிடுவது அதற்குத் தேவையான இடத்தையும் அதிகரிக்கிறது. இந்த வகையில் பார்த்தால், இந்த சிறிய முகமூடி பல்வேறு வழிகளில் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும்.
இதன் விளைவாக, உலகின் பல நாடுகள் இப்போது இந்த முகமூடியை மறுசுழற்சி செய்யக்கூடிய முகமூடியாக மாற்ற முயற்சிக்கின்றன. மேலும், மீண்டும் பயன்படுத்தக்கூடிய முகமூடிகளை தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முகமூடிகளை கிருமி நீக்கம் செய்து பயன்படுத்தலாமா என சில நாடுகள் சோதித்து வருகின்றன. மற்ற நாடுகளும் பயோ-டிகோடபிள் முகமூடிகளை தயாரிக்க முயற்சிக்கின்றன. இதுபோன்ற சுற்றுச்சூழலுக்கு பாதிப்பற்ற முகமூடிகளை உருவாக்க முடிந்தால், அது சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மிகவும் உகந்ததாக இருக்கும்.