லெபனான் போன்ற கடுமையான நெருக்கடியை இலங்கை சந்திக்க நேரிடும்!

எதிர்வரும் ஜனவரிக்குள், தற்போதைய லெபனான் போன்ற கடுமையான ஆற்றல் நெருக்கடியை இலங்கை சந்திக்க வேண்டியிருக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாடலி சம்பிக்க ரணவக்க (Patali Champika Ranawaka) எச்சரித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த விடயத்தில் இலங்கை அரசாங்கம் தீவிர கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“நாட்டின் பொருளாதார நெருக்கடி படிப்படியாக ஆற்றல் நெருக்கடியாக மாறி வருவகின்றது. கச்சா எண்ணெயை கொள்வனவு செய்வதற்காக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் விடப்பட்ட ஐந்து டெண்டர்களுக்கும் விண்ணப்பதாரர்கள் எவரும் முன்வரவில்லை.

எனவே எதிர்காலத்தில் சுத்திகரிப்பு நிலையத்தை மூட வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *