சிறையில் உள்ள மகனை சந்தித்தார் ஷாருக்கான்!

போதைப் பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மகன் ஆர்யன் கானை, நடிகர் ஷாருக் கான் இன்று காலை 10 நிமிடங்கள் சந்தித்துப் பேசினார்.

மும்பை: போதைப் பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில், பிரபல நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் கைதுசெய்யப்பட்டு சிறைக்காவலில் உள்ளார். மும்பை ஆர்தர் ரோடு சிறைச்சாலையில் தற்போது ஆர்யன் கான் வைக்கப்பட்டுள்ளார்.இதையடுத்து, ஆர்யன் கான் தரப்பு பிணை கேட்டு சிறப்பு நீதிமன்றத்தை அணுகிய நிலையில், ஆர்யன் கானின் பிணை மனுவை நீதிமன்றம் நேற்று (அக். 20) நிராகரித்தது.இந்நிலையில், ஆர்தர் ரோடு சிறைச்சாலையில் உள்ள ஆர்யன் கானை, அவரது தந்தையும், பிரபல நடிகர் ஷாருக்கான் இன்று (அக். 21) சந்தித்து பேசினார்.

இதற்காக காலை 9 மணிக்கெல்லாம் ஷாருக்கான் சிறைக்கு வந்திருந்தார், அங்கிருந்து பாதுகாப்புடன் சிறைக்குள் சென்ற அவர் ஆர்யன் கானை சந்தித்து 10 நிமிடங்கள் பேசினார். தொடர்ந்து அவர் 9.35 மணிக்கு அங்கிருந்து கிளம்பினார்

அப்போது அவர் சோகத்துடன் காணப்பட்டார். ஆர்யன் கான் பிணை மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து, ஆர்யன் கான் தரப்பு மும்பை உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகக் கூறப்பட்டது. மேலும், ஆர்யன் உள்பட மூன்று பேருக்கு பிணை மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *