இலங்கையில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்!
மக்களின் கவனயீனமாக நடவடிக்கையினால் எதிர்காலத்தில் கொவிட் தொற்றாளார்களின் எண்ணிக்கை அதிகரித்தால் தேவையற்ற விதத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று (21) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் தெரிவித்துள்ளார்.
தயவு செய்து சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மாகாண கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலத்தில் பலர் சுற்றுலா சென்றுள்ளதை அவதானிக்க கூடியதாக இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.