நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!
வெல்லவாய பகுதியில் எல்லவெல நீர்வீழ்ச்சியில் நீராடசென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காத்தான்குடி பகுதியை சேர்ந்த 38 வயதுடைய தந்தை மற்றும் 15 மற்றும் 11 வயதுகளை உடைய இரண்டு பிள்ளைகளே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும், சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், மரண பரிசோதனைகள் முன்னெடுக்க்படவுள்ளது.
அத்துடன், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.