இலங்கையில் மற்றொரு பாரிய கொரோனா அலை உருவாகலாம்!

கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இல்லாமல் கொரோனா நோயாளர்கள் சமூகத்தில் இருப்பதாக பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி மீண்டும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

இந்த நிலைமைக்கு மத்தியில் பொதுமக்களுக்கு எழுமாற்றாகப் பரிசோதனைகளை மிக விரைவாக மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட இந்தக் காலத்தில் பொது மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை மீறுவதாகத் தெரிகிறது என்றும் இது தொடர்ந்தால், பாரிய அளவில் கொரோனா அலைகளை கட்டுப்படுத்த முடியாத நிலைமை ஏற்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *