அமேசான் நிறுவனத்தில் ஓட்டுநராக இருந்தவர் ஆட்ட நாயகன் விருதைப் பெற்று அசத்தினார்!

டி20 போட்டி தொடர் கடந்த ஞாயிற்றுகிழமை தொடங்கியது. இதன் தகுதி சுற்றில் ஸ்காட்லாந்து மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இதில் வங்கதேசம் அணி தோல்வியை தழுவியது.

இந்த போட்டியில் ஸ்காட்லாந்து வீரர் கிறிஸ் கிரேவ்ஸ் பேட்டிங்கில் 45 ரன்கள் எடுத்து மட்டுமில்லாமல் பந்துவீச்சிலும் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனால் இவருக்கு ஆட்டநாயகன் வீருது வழங்கப்பட்டது.

இந்த போட்டிக்கு பிறகு பேசிய கைல் கொய்ட்சர், இந்தப் போட்டியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த கிறிஸ் கிரேவ்ஸ் அமேசான் டெலிவரி நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை பார்த்தவர் என்று கூறினார்.

மேலும் கிறிஸ் கிரேவ்ஸின் இன்றைய ஆட்டத்தை பார்த்து தான் பெருமையடைவதகாவும், அவர் கிரிக்கெட்டிற்காக நிறைய தியாகம் செய்துள்ளார் என்றும் தெரிவித்தார்.

அத்துடன் அமேசான் டெலிவரி நிறுவனத்தில் ஓட்டுநராக இருந்தவர் இன்று டி20 உலகக் கோப்பை போட்டியில் ஆட்ட நாயகன் விருதை பெற்றுள்ளார். அவரின் திறைமையை பாராட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *