ஆபாச படத்திற்கு அடிமையாக்கும் சிறுவர்கள் காரணமாகும் பெற்றோர்கள்!
அதீத மொபைல் உபயோகம், கட்டுப்பாடுகளற்று டிஜிட்டல் திரையைப் பார்ப்பது போன்றவை பார்வைக் குறைபாடு தொடங்கி பலவகையான உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தும்.
உடலுறுப்பு சார்ந்த வளர்ச்சி, பேச்சுத்திறன், பார்வைத்திறன் போன்றவை முழுமைபெற்ற பெரியவர்களுக்கே டிஜிட்டல் திரைகள் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் குழந்தைகளுக்கு இதன் பாதிப்பு அதிகமாகவே இருக்கின்றது.
சில பெற்றோர்கள் குழந்தைகள் சாப்பிடுவதற்கு அடம்பிக்கின்றனர் என்றால் உடனே மொபைல் போனை கையில் கொடுத்து விடுகின்றனர். இது மிகப்பெரிய பின்விளைவினை ஏற்படுத்தும் என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அதே போன்று வயதிற்கு வந்த பிள்ளைகளிடம், மொபைல் போன் தேவை என்றால் பெற்றோர்களின் கண்காணிப்பில் இருக்கும் படியாக பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவர்களின் எண்ணங்களில் தடுமாற்றம் ஏற்படும் வாய்ப்பும் அதிகம். காரணம், வளர்ந்த குழந்தைகளுக்கு, அனைத்தையும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருக்கும்.