கொரோனாவின் புதிய அலை உருவாகியுள்ளது!
உலகெங்கிலும் கொரோனா வைரஸின் புதிய அலை உருவாகி வருவதாக, ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துறை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்தார்.
அந்த அலையால், நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, அவர் மேலும் கூறினார்.
மேலும், நாட்டில் தடுப்பூசி திட்டம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தடுப்பூசி திட்டம் தொடர்பான தடுப்பூசிகளை வாங்குவது தொடர்பான அனைத்து விவரங்களும் எதிர்காலத்தில் வெளியிடப்படும் என்றார்.
தொற்றாளர் மற்றும் மரணங்கள் குறைந்து வருவதால், கொவிட் தொற்று குறைந்துவிட்டது என தவறாக எண்ண வேண்டாம் எனவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் வைரஸ் மாற்றம் அடையாது என யாராலும் சொல்ல முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொவிட் தடுப்பூசி திட்டம் தொடர்பில் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வது தொடர்பான அனைத்து தகவல்களும் எதிர்காலத்தில் விரிவாக வௌிப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி திட்டம் தற்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.