15 மனைவிகள் 100 குழந்தைகள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு பெண்ணை திருமணம் செய்யும் மன்னர்!

ஆப்பிரிக்காவில் மன்னர் ஒருவர் ஒவ்வொரு ஆண்டும் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

பல ஆண்டுகளுக்கு முன் உலகம் முழுவதும் மன்னர் ஆட்சி தான் நடைபெற்று வந்தது. ஆனால் இந்த நவீன காலத்தில் முடி ஆட்சி எல்லாம் எப்பொழுதோ முடிந்துவிட்டது. இருப்பினும் ஓரி சில நாடுகளில் மன்னர் ஆட்சி நடந்து வருவதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் ஆப்பிரிக்காவில் தற்போதும் மன்னராட்சி அமலில் இருக்கிறது. ஸ்வாசிலாந்து என்ற நாட்டில் மன்னராட்சி முறை நடைமுறையில் உள்ளது. 2018ஆம் ஆண்டு அந்த நாட்டின் பெயரை எஸ்வதினி ராஜ்ஜியம் என்று மாற்றியுள்ளார்.

இது தென்னாபிரிக்காவின் எல்லையில் அமைந்துள்ளது. இந்த நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தில் உம்லாங்கா விழா நடைபெறும். இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருமணமாகாத பெண்கள் கலந்து கொண்டு ராஜாவின் முன் நடனமாடுவார்கள்.

அந்த பெண்களில் ஒருவரை மன்னர் தனது ராணியாக தேர்வு செய்வதாக கூறப்படுகிறது. அவரது நாட்டில் பெரும்பாலான மக்கள் ஏழைகளாகவே உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2015ஆன் ஆண்டு இந்தியா ஆப்பிரிக்கா உச்சி மாநாட்டில் பங்கேற்க அந்த மன்னர் இந்தியா வந்திருந்தார். அப்போது அவர் தனது 15 மனைவிகள் மற்றும் 100 குழந்தைகளை அழைத்து வந்திருந்தது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *