கழிவறையை சுத்தம் செய்யும் இந்தியப் பிரபலம்!

தூய்மை இந்தியா திட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள கழிவறையை சுத்தம் செய்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

இந்த தூய்மை இந்திய திட்டமானது கடந்த 2019ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

தூய்மை இந்தியா இயக்கம் நாடு முழுவதும் தேசிய இயக்கமாக தற்போது செயல்பட்டு வருகிறது. மக்கள் இயக்கமாக இத்திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் இந்தியா தூய்மையாகவும் சுகாதாரமாகவும் இருந்தால் மகாத்மா காந்தி அடிகளின் கனவு நனவாகும் என்றும் கூறினார் பிரதமர் மோடி.

புதுடெல்லியில் உள்ள காவல் நிலையத்தை தானே தூய்மைப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார் பிரதமர் மோடி.

சமுதாயத்தின் பல பிரிவினரும் தூய்மை இந்தியா இயக்கத்திற்கு பல்வேறு வகையில் ஆதரவு அளித்து வருகின்றனர்.

இந்த இயக்கத்திற்கு அரசு அலுவலர்கள், போர் வீரர்கள், திரைப்பட நடிகர்கள், விளையாட்டு வீரர், தொழிலதிபர்கள், ஆன்மீக தலைவர்கள் என அனைவருமே ஆதரவளித்துள்ளனர்.

அந்த வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள கழிவறையை சுத்தம் செய்து தூய்மை இந்தியா திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *