குர்ஆனை தடை செய்ய வேண்டுமாம் அஜித தேரர் தெரிவிப்பு!

மனிதர்களை திரு குர்-ஆன் கொல்ல சொல்லுமாக இருந்தால் அதை தடை செய்யுங்கள் என தேவால்ஹிந்த அஜித தேரர் (Venerable Dewalehinda Ajitha Thero) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஞானசார தேரர் (Galagoda Aththe Gnanasara) கூறியது உண்மை என்றும், அவர் கூறியதை போன்று நாட்டில் மீண்டும் ஐ.எஸ்.ஐ.எஸ் தாக்குதல் இடம்பெறலாம் எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர (Sarath Weerasekara) கூறியுள்ளார்.

இதற்கு காரணம் திரு குர்-ஆன் என்றும், அல்லாஹ்வை வழிபட்டு அதை போதிக்கும் முஸ்லிம் மக்களுமே எனவும் அவர் கூறியுள்ளார்.

எந்தவொரு மதத் தலைவரும் கொலைகாரர்கள் அல்ல என்பதை சரத் வீரசேகரவிற்கு நான் கூறிக் கொள்ள விரும்புகின்றேன். உலகளாவிய ரீதியில் கோடிக்கணக்கான முஸ்லிம்கள் உள்ளனர்.

அப்படியும் மனிதர்களை கொல்ல சொல்லும் மதங்கள் இலங்கையில் இருந்தால் அப்படியான மதங்கள் எமக்கு தேவையில்லை.

மூன்றில் இரண்டு பலம் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு தைரியமில்லையா? ஜனாதிபதி, பிரதமருக்கு தைரியம் இல்லையா ?

மனிதர்களை திரு குர்-ஆன் கொல்ல சொல்லுமாக இருந்தால் அதை தடை செயுங்கள், அப்படி ஒரு பகுதி அதில் இருந்தால் அதை நீக்குங்கள்.

இந்த பிரச்சினைகளால் இந்த நாட்டில் வாழும் முஸ்லிம், கத்தோலிக்க, சிங்கள மக்கள் என அனைவரும் தினம் தினம் பயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

வாக்குகளுக்காக கோட்டாபய ராஜபக்ச, மஹிந்த ராஜபக்ச பள்ளிவாசல்களுக்கு சென்றுள்ளார்கள். அங்கு சென்று வாக்கு பிச்சை எடுக்கின்றார்கள்.

மூன்றில் இரண்டு பலத்தை பெற முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பை பெறுகின்றார்கள். முஸ்லிம் மக்களை ஏசிக் கொண்டே உதய கம்மன்பில முஸ்லிம் நாடுகளுக்கு சென்று பிச்சை எடுக்கின்றார்.

தமிழ் மக்களை இனவாதி என்று சொல்கின்றார்கள் அப்படியென்றல் நிரூபமாவின் கணவர் நடேசன் யார்? அவர் ஒரு தமிழர்.

அப்படியென்றால் ஏன் இப்படியான பிரச்சினைகள் வர வேண்டும்? நாட்டில் இனவாதத்தை ஏற்படுத்தி விட்டு வெளிநாடுகளில் சென்று ஏன் பிச்சை எடுக்கின்றீர்கள். யாரை ஏமாற்றுகின்றீர்கள்? என கேள்விக்கணைகளை தொடுத்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *