பாலத்தின் அடியில் சிக்கிய விமானத்தால் பரபரப்பு!

ஏர் இந்தியா விமானம் ஒன்று நடுரோட்டில் பாலத்திற்கு அடியில் சிக்கிக்கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

டெல்லியின் ஐஜிஐ விமான நிலையத்தின் அருகே உள்ள டெல்லி-கூர்கான் ஹைவே பாதையில் பாலத்திற்கு கீழே விமானம் ஒன்று சிக்கிக் கொண்டது.

ஏர் இந்தியா நிர்வாகம் அளித்துள்ள விளக்கத்தில், இந்த விமானம் பயன்பாட்டில் இல்லாத விமானம் என்றும், இதை வேறு ஒருவர் வாங்கிவிட்டதாகவும், அவருக்கு டெலிவரி செய்வதற்கு எடுத்துச் சென்ற பொழுது இப்படி சிக்கிக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் லாரியில் எடுத்துச் சென்ற டிரைவரின் கவனக்குறைவால் இது நிகழ்ந்துள்ளதாக நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *