கொரோனா ஒழிக்கப்பட்ட நாடாக இலங்கை மாறும்!

இலங்கையில் அடுத்த சில மாதங்களில் கொரோனா தொற்றை ஒழிக்க முடியும் என்று சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

தான் அதை உறுதியாக நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலகில் தடுப்பூசி செலுத்தப்பட்ட நான்கு முக்கிய நாடுகளில் இலங்கை முன்னணி நாடாக மாறியுள்ளது என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எல்லா நேரமும் மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதைப் பிரதான பொறுப்பாகக் கொண்டு அரசாங்கம் செயற்படு கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் பதில் வழங்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *