கறுப்பு பண பதுக்கல் பெயர் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர்!

வெளிநாட்டில் கறுப்பு பணத்தை இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பதுக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த 2015-ம் ஆண்டு பனாமா பேப்பர்ஸ் வெளியாகி சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது பண்டோரா பேப்பர்ஸ் என்ற ஆவணங்கள் வெளியாகியுள்ளது. அதில் வெளிநாடுகளில் ரகசியமாக பல கோடி ரூபாய் முதலீடு மற்றும் ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்தவர்களின் பட்டியலில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பெயரும் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து சச்சின் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், முறைப்படி சொத்துகளை  வாங்கியுள்ளதாக அவர் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *