நடிகை சமந்தா விவாகரத்திற்கு முக்கிய காரணம் வெளியானது!

நடிகை சமந்தா விவகாரத்திற்கு முக்கிய காரணம் என்ன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் நல்லதொரு நடிகையாக வலம் வரும் சமந்தா, கடந்த 2017-ஆம் ஆண்டு, நடிகர் நாகர்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னரும் நடிகை சமந்தா தொடர்ந்து நடித்து வந்தார். அதுமட்டுமின்றி திருமணம் முடிந்து மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது, இன்னும் குழந்தை இல்லை என்ற பேச்சும் அடிபட்டது.

இந்நிலையில், தான் நேற்று இருவருமே, நாங்கள் பிரிவதாக அறிவித்தனர். இவர்களின் பிரிவு ரசிகர்களுக்கு மட்டுமின்றி, திரைப்பிரபலங்கள் பலருக்கும் கடும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

தற்போது இந்த விவகாரத்திற்கு முக்கிய காரணம் என்ன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதில், திருமணத்திற்கு பின்னரும் சமந்தா தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார்.

ஏனெனில் திருமணத்திற்கு முன்னரே சமந்தா 7 படங்களில் கமிட் ஆகி இருந்ததால், இந்த படம் எல்லாம் முடித்துவிடுகிறேன் என்று சமந்தா வாக்குறுதி கொடுத்துள்ளார்.

ஆனால் வாக்குறுதி அளித்தபடி நடக்காமல், தொடர்ந்து புதிய படங்களை ஒப்புக் கொண்டு சமந்தா நடித்து வந்ததால், நாக சைத்தன்யா அதிருப்தி அடைந்ததாகக் கூறப்படுகிறது.

திருமணமாகி 4 ஆண்டுகள் கடந்தும் அக்கினேனி குடும்பத்துக்கு வாரிசு ஒன்றை பெற்றுக் கொடுக்கும் பக்குவத்துக்கு சமந்தா வராததால் குடும்பத்திலும் பிரச்சனை ஏற்பட்டு வருவதாக அங்கிருக்கும் ஊடகங்கள் குறிப்பிட்டிருந்தன.

மேலும், தான் அப்படி திரைப்படத்தில் நடிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றால் நாக சைதன்யா குடும்பத்துக்கு சொந்தமான, பல நூறுகோடி ரூபாய் மதிப்புள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டி மற்றும் அன்னபூர்னா ஸ்டூடியோ ஆகியவற்றில் தன்னையும் ஒரு பங்குதாரராக சேர்க்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளார்.

இதுவே அவர்கள் இருவருக்குமிடையே கடும் மோதலை ஏற்படுத்தியுள்ளது.

இதைத் தொடர்ந்து, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்க நாகசைதன்யா தடை போட்டதாகவும், அதையும் மீறி சமந்தா நயன்தாராவுடன் சேர்ந்து 2 வது நாயகியாக நடித்து வருகிறார்.

அதில், அமலாவின் கேரக்டரை இமிடேட் செய்யும் வளையோசை பாடலில் விஜய்சேதுபதியுடன் ஜோடியாக பேருந்தில் செல்லும் வீடியோ காட்சி வெளியானதால் குடும்பத்தில் பெரும் பிரச்சனை ஏற்பட்டு, இறுதியில் இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *