திருமணத்தில் சாப்பாடு கொடுக்கவில்லை நபர் ஆத்திரத்தில் செய்த வேலை!

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற புகைப்படக் கலைஞர் திருமண வீட்டில் எடுத்த அனைத்து புகைப்படங்களையும் அளித்த சம்பவம் ஒன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது .

அமெரிக்காவில் பெண் புகைப்படக் கலைஞர் தன் நண்பரின் திருமணத்தை புகைப்படம் எடுத்துத் தர சம்மதித்துள்ளார்.

எனினும் அவர் தொழில் ரீதியான திருமண புகைப்படக் கலைஞர் இல்லை. நண்பருக்காக இதை குறைந்த ஊதியத்தில் செய்ய சம்மதித்துள்ளார்.

இந்நிலையில் திருமணத்தன்று அவருக்கு உணவுத் தராமல் தொடர்ந்து புகைப்படம் எடுக்க சொல்லியுள்ளனர். இதனால் பசியின் ஆத்திரத்தில் மணமகனின் கண் முன்னாலேயே அவர் எடுத்த அனைத்துப் புகைப்படங்களையும் அழித்துள்ளார்.

அத்துடன் இது தொடர்பில் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட அது உலகம் முழுவதும் கவனத்தைப் பெற்றுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *