பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை!
பிரபல கன்னட தொலைக்காட்சி நடிகை சௌஜன்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரில் கும்பல் கோட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த கன்னட தொலைக்காட்சி நடிகை சௌஜன்யா. இவர் திடீரென தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறி்த்து பொலிசார் அவரது குடும்பத்தினர் மற்றும் சக ஊழியர்களிடையே நடத்திய விசாரணையில், கடிதம் ஒன்று சிக்கியுள்ளது.
அக்கடிதத்தில் தான் தற்கொலை செய்வதற்கு வேறு யாரும் காரணம் இல்லை என்றும் தான் மட்டுமே பொறுப்பு என்றும் அந்த கடிதத்தில் கூறியதுடன், மேலும் தனது பெற்றோர்களிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார்.