நாடு கட்டம் கட்டமாகவே திறக்கப்படும் சுதர்ஷனி தெரிவிப்பு!
எதிர்காலத்தில் நாடு ஒரே நேரத்தில் திறக்கப்படாமல் கட்டம் கட்டமான முறையின் கீழ் திறக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா தொற்றாளர்கள், கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் வைத்தியசாலைகளில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளன என அவர் கூறியுள்ளார்.
எனவே நாட்டை ஒரே நேரத்தில் திறக்காமல் கட்டம் கட்டமாகத் திறக்க வேண்டும் என அவர் தெரிவித் துள்ளார்.
நாட்டில் கொரோனா அவதானம் காணப்படுகின்ற மையை பொது மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் சுகாதார வழிகாட்டிகளைச் சரியான முறையில் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.